ஆப்நகரம்

பள்ளி பாடபுத்தகத்தில் அபிநந்தன்! ராஜஸ்தான் அரசு அதிரடி!!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் வீரத்தை கெளரவிக்கும் வகையில், அவரைப் பற்றிய பாடம் பள்ளி பாடபுத்தகத்தில் இடம் பெறும் என்று ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Mar 2019, 7:40 pm
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் வீரத்தை கெளரவிக்கும் வகையில், அவரைப் பற்றிய பாடம் பள்ளி பாடபுத்தகத்தில் இடம் பெறும் என்று ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil abhinandan varthaman


இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானத்தில் சென்று, பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, பின் அந்நாட்டு ராணுவத்திடம் விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கிக் கொண்டார். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கையில், முதுகில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டார்.


இரு நாட்களுக்கு பின், சில மணி நேரத் தாமதத்தை அடுத்து, நேற்று இரவு 9.20 மணிக்கு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து வீரநடை போட்டு வந்த அபிநந்தனுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது இளைஞர்கள் மத்தியில் அபிநந்தனின் மீசை ட்ரெண்ட் ஆகியது. வருகிறது. அபிநந்தனின் முதல் குறியீடாக அவருடைய மீசை இருப்பதால், ஹேஸ்டேக், ட்ரெண்ட் என எல்லாவற்றிலும் அபிநந்தன் மீசை கார்டூன் இடம் பெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அபிநந்தன் மீசை என்று சொல்லி இளைஞர்கள் விரும்பி வைத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனைப் பற்றி பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என்று ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி