ஆப்நகரம்

காஷ்மீர் விவகாரத்தில் மவுனத்தைக் கலைத்த ராகுல் காந்தி - டுவிட்டரில் தடாலடி பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Samayam Tamil 6 Aug 2019, 1:19 pm
நாடு சுதந்திரம் அடைந்ததை அடுத்து, ஜம்மு காஷ்மீர் சில நிபந்தனைகளை முன்வைத்து, இந்தியாவுடன் இணைந்தது. இத்தனை ஆண்டுகளாக கடைபிடித்து வந்த, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 371, 35ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Rahul Gandhi


அதேசமயம் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

Also Read: Article 370: ஜம்மு காஷ்மீர் லைவ் அப்டேட்ஸ்...!

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி இதுபற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் இந்த மசோதாக்கள் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.

Also Read: Jammu Kashmir Flag: மோடி அரசால் நிறைவேறிய ஜன சங்கத்தின் ஆசை!!

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காஷ்மீர் விவகாரம் குறித்து தனது மவுனத்தைக் கலைத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மத்திய அரசு சிறை வைத்துள்ளது.

அரசியல் சாசனத்தை மீறி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு மக்களால் உருவானது. வெறும் நிலத்தால் ஆனது அல்ல.

Also Read: சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க உயிரை கொடுப்பேன் - அமித் ஷா!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால், நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் தீங்கு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி