ஆப்நகரம்

சிபிஎஸ்இ வினாத்தாளை விற்ற ஏபிவிபி மாணவர் அமைப்பு தலைவர்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஏபிவிபி மாணவர் அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 31 Mar 2018, 7:14 pm
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஏபிவிபி மாணவர் அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 115840-cbse


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளாதாரத் தேர்வு வினாத்தாளும் 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே பல மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் கசிந்ததாக தகவல் வெளியானது.

இது குறித்து விசாரணை நடத்தவும் மறுதேர்வு நடத்தவும் பல மாணவர்களின் பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால், வினாத்தாள் முன்கூட்டிய வெளியானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உட்பட 12 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 9 சிறுவர்கள் மீதும் சிறார் சீர்திருத்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரான சதீஷ் பாண்டே டியூஷன் சென்டர் ஒன்றை நடத்தினார். இவர் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாளை லீக் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி