ஆப்நகரம்

100% கடனையும் கொடுத்திடுறேன் - அந்த விஷயத்தை மட்டும் முடிச்சி வச்சிருங்க - விஜய் மல்லையா!

தான் வாங்கிய மொத்த கடனையும் செலுத்திவிடுகிறேன் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 May 2020, 1:24 pm
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். தற்போது லண்டனில் தங்கி வரும் மல்லையா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரை நாடு கடத்தும் வகையில் லண்டன் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பான வழக்கில் ஜாமீன் பெற்றுக் கொண்டு, நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
Samayam Tamil விஜய் மல்லையா


ஆனால் இதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை விஜய் மல்லையா நாடியுள்ளார். இந்த சூழலில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பதுங்குனது பாயறத்துக்கா?- தேசிய நெடுஞ்சாலையில் மெர்சல் காட்டிய சிறுத்தை புலி!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

அதன்படி முதல்கட்டமாக 6 லட்சம் கோடி ரூபாய்க்காக திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விஜய் மல்லையா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய வங்கிகளில் தான் பெற்ற 100 சதவீத கடன்களையும் திருப்பி செலுத்துவிடுகிறேன்.

எனது கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இம்முறை எனது கடன் தொகையை பெற்றுக் கொண்டு என் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆளுக்கு ரூ.10 ஆயிரம்; சொந்த ஊருக்கு வராதீங்க - ஜீரோ ஃப்ரீ மாநிலத்தின் அதிரடி திட்டம்!

முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சார்பாக வாங்கிய கடன் தொகை 100 சதவீதத்தையும் திருப்பி செலுத்த தயாராக இருக்கிறேன். ஆனால் வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. அமலாக்கத்துறையும் எனது சொத்துகளை விடுவிக்க மறுப்பு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அடுத்த செய்தி