ஆப்நகரம்

பண மோசடி குற்றச்சாட்டு: வங்கி அதிகாரி தற்கொலை

பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 29 Dec 2016, 3:54 am
பெங்களூரு: பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil accused of laundering money bank staff kills self
பண மோசடி குற்றச்சாட்டு: வங்கி அதிகாரி தற்கொலை


ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் பண மேலாண்மை துறையில் பணியாற்றி வந்தவர் ரவிராஜ் (55). பெங்களூரு விவேக் நகரில் வசித்து வரும் இவர், மத்திய அரசின் அறிவிப்பான பண மதிப்பிழக்கத்தை தொடர்ந்து, சுமார் ரூ.20 லட்சம் அளவிற்கு பழைய நோட்டுகளை, புதிய ரூ.2,000 அல்லது செல்லக் கூடிய வேறு சில நோட்டுகளாக மாற்ற சிலருக்கு, உதவி புரிந்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, வங்கியில் அண்மையில் நடைபெற்ற மத்திய குழுவின் சோதனையில், ரவிராஜின் மோசடி வெளிவந்துள்ளது. அதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரவிராஜ் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கைது குறித்த அச்சம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விவேக் நகர் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Accused of laundering money, bank staff kills self

அடுத்த செய்தி