ஆப்நகரம்

சபரிமலை தங்க கொடிமரத்தில் ஆசிட் வீசிய மர்ம நபர்கள்!

சபரிமலையில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆசிட் வீசிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 25 Jun 2017, 9:41 pm
சபரிமலையில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆசிட் வீசிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil acid attack on sabarimala temple gold covered mast
சபரிமலை தங்க கொடிமரத்தில் ஆசிட் வீசிய மர்ம நபர்கள்!


கேரள மாநிலம் சபரிமலையில் புதியதாக தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பத்தினந்திட்டை மாவட்டம் ரான்னி காட்டில் இருந்து தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டு பூஜைகளுக்கு பின் கொடி மரம் செதுக்கப்பட்டது. 9 ஆயிரத்து 200 கிலோ தங்கம் தகடுகளாக மாற்றப்பட்டு கொடிமரத்தில் பதிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடி மர பீடத்தில் பிரதிஷ்டை சடங்குகளை நடத்தினார். மாலையில் மூன்று பேர் கொடிமரத்தின் மீது அமிலம் வீசிவிட்டு தப்பினர். இச்சம்பவம் கோவில் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பம்பை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Acid attack on Sabarimala temple Gold covered Mast, police started probe.

அடுத்த செய்தி