ஆப்நகரம்

மண்டையை பிளக்கும் வெயில்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மதிய நேரங்களில் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TNN 24 Apr 2016, 12:26 pm
சென்னை: நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மதிய நேரங்களில் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil across the country death toll rises for heat wave peoples adviced not to go out
மண்டையை பிளக்கும் வெயில்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமதிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி