ஆப்நகரம்

ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை - காங்கிரஸ் வலியுறுத்தல்

ஐ.எஸ் அமைப்புடம் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு இருப்பின், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

TNN 7 Jul 2016, 7:21 pm
டெல்லி: ஐ.எஸ் அமைப்புடம் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு இருப்பின், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Samayam Tamil action against zakir naik if evidence found dig vijay singh
ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை - காங்கிரஸ் வலியுறுத்தல்


வங்கதேச தலைநகர் டாக்காவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு ஊக்குவித்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரது பேச்சை ஆய்வு செய்யுமாறு, இந்தியாவிடம் வங்கதேச அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கலந்து கொண்டு, அவரை புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

தற்போது செய்தியாளர்களிடம் பேசிய திக் விஜய் சிங், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் ஜாகி நாயக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி