ஆப்நகரம்

மீண்டும் எகிறும் கொரோனா; அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாகும் வைரஸ்!

தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Nov 2020, 10:41 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக ஏற்றம் கண்டுள்ளது. அதுவும் குணமாகும் நபர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பது எச்சரிக்கையூட்டும் வகையில் இருக்கிறது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பிறகு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை. எனவே இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் தற்போது 4,47,391 பேர் கொரோனா பாதிப்பால் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil Coronavirus in India


நேற்றைய தினம் புதிதாக 44,188 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 92,22,665ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 500க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நேற்று புதிதாக 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்து வீடு திரும்பிய நபர்களின் எண்ணிக்கை 86,40,000ஆக இருக்கிறது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 93.7 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது.

மாட்டுறைச்சியும், கோமாதாவும்; ரெகானா ஃபாத்திமா மீண்டும் சர்ச்சை!

இம்மாநிலத்தில் நேற்று புதிதாக 6,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டெல்லியில் தொடர்ந்து 9வது நாளாக புதிய பாதிப்புகள் உச்சத்தில் இருக்கின்றன.

தொடர்ந்து 4வது நாளாக பலி எண்ணிக்கை உச்சம் தொட்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 5,439 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானதன் மூலம் மொத்த பாதிப்பு 17,89,800ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் புதிதாக 939 பேர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். ராஜஸ்தானில் புதிதாக 3,314 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி