ஆப்நகரம்

ட்விட்டரில் மோதிய விஜய்யும் கொரோனாவும்: ஜெயித்தது யார்?

2020ஆம் ஆண்டில் ட்விட்டரில் தாக்கம் செலுத்திய பதிவுகள், ஆளுமைகள், மக்களின் மனநிலைகள் குறித்து ட்விட்டர் நிர்வாகம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 Dec 2020, 10:16 am
ஆன்லைன் பயன்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் சமூக வலைதளங்களிலேயே மக்கள் குடியிருக்கத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. அதிலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவானதால் சமூகவலைதள பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
Samayam Tamil vijay modi


மக்கள், பிரபலங்கள் அதிகம் நாடும் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தளம் 2020ஆம் ஆண்டில் அதன் பயனர்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு அதிகமாக ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படமாக நடிகர் விஜய்யின் செல்ஃபியை காட்டுகிறது ட்விட்டர் நிறுவனம். மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் தனது ரசிகர்களோடு எடுத்துக் கொண்ட செல்ஃபி தான் 2020ஆம் ஆண்டு அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் எடுக்கும் சமயம் தான் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட விஜய்யின் செல்ஃபி

அரசியலில் அதிகமாக ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படமாக மோடி கொரோனாவுக்காக வீட்டில் விளக்கு ஏற்றிய படம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி பகிர்ந்த மோடியின் கடிதம் விளையாட்டுத்துறையில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட படமாக உள்ளது.

விராட் கோலி தனது அனுஷ்கா ஷர்மா கருவுற்றிருக்கும் செய்தியை வெளியிட்ட ட்வீட் அதிக லைக்ஸ்களைப் பெற்ற ட்வீட்டாக வலம் வருகிறது.

விளையாட்டுத்துறையில் IPL2020, சினிமாத் துறையில் Dil Bechara ஆகியவை அதிக ஹேஸ்டேக்களை உருவாக்கின. Binod என்ற யூ டியூப் கமெண்ட் ஹிட் அடிக்க அது குறித்து அதிக மீம்ஸ்கள் உருவாகின. ட்விட்டரிலும் Binod மீம்ஸ்களை குறித்தே அதிக ட்வீட்டுகள் பதிவாகியுள்ளன.

சசிகலாவால்தான் ஜெயலலிதா ஏ1 ஆனாரா?

தற்போதைய நிகழ்வுகள் என்ற தலைப்பின் கீழ் கொரோனா வைரஸ், நடிகர் சுஷாந்த் சிங் மரணம், ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகளவில் பேசப்பட்டுள்ளன.

தகவல்களை வழங்குதல், மக்களை இணைத்தல், பொழுது போக்குதல் ஆகிய மூன்று பிரிவுகளில் ட்விட்டர் முக்கிய பங்காற்றியதாக ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பத்து லட்சம் ட்வீட்டுகள் 22 நகரங்களிலிருந்து 100 நாள்களில் வந்ததாக தெரிவித்துள்ள அவர் கடந்த ஆண்டையும், இந்த ஆண்டையும் ஒப்பிட்டு மக்கள் அதிகம் பேசியுள்ளதாக கூறினார். ரொமான்ஸ் பற்றி அதிகமாக பஞ்சாப்பில் உள்ள லுதியானா நகர மக்கள் பேசியுள்ளனர்.

பந்த்: தமிழகத்தில் இன்று எவை இயங்கும், எவை இயங்காது?

ராஜ்புர் மக்கள் விலங்குகளைப் பற்றியும், புவனேஸ்வர் மக்கள் குடும்பம் குறித்தும், மும்பை மக்கள் பழைய நினைவுகளை குறித்தும் விவாதித்துள்ளனர்.

மக்களின் பொழுதுபோக்கு தொடர்பாக உதாரணமாக சமையல், புகைப்படம், யோகா, உடற்பயிற்சி, கவிதை குறித்தும் அதிக உரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

உலகளவில் ஒரு நிமிடத்துக்கு 7000 ட்வீட்டுகள் டிவி மற்றும் திரைப்படம் குறித்து பதிவாகியுள்ளது. தமிழில் சூரரைப் போற்று திரைப்படம் அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி