பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமிதாப் பச்சனின் மருமகளான நடிகை ஐல்வர்யா ராய்க்கும் ,அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாயும், மகளும் கடந்த ஐந்து நாட்களாக அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஐல்வர்யா ராயும், அவரது மகள் ஆரத்யாவும் கொரோனா சிகிச்சைக்காக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இன்று (ஜூலை 17) நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய், கணவர், மகள், மாமனாருக்கு கொரோனா எதிரொலி: 4 பங்களாக்களுக்கு சீல்
ஏற்கெனவே அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் நலனுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அவர்களது ரசிக்ர்கள் நிம்மதி அடைந்தனர்.
பாலிவுட் நட்சத்திர குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆரத்யா ஆகிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சனுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை என்பது அவரது நலவிரும்பிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமிதாப் பச்சனின் மருமகளான நடிகை ஐல்வர்யா ராய்க்கும் ,அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாயும், மகளும் கடந்த ஐந்து நாட்களாக அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஐல்வர்யா ராயும், அவரது மகள் ஆரத்யாவும் கொரோனா சிகிச்சைக்காக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இன்று (ஜூலை 17) நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய், கணவர், மகள், மாமனாருக்கு கொரோனா எதிரொலி: 4 பங்களாக்களுக்கு சீல்
ஏற்கெனவே அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் நலனுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அவர்களது ரசிக்ர்கள் நிம்மதி அடைந்தனர்.
பாலிவுட் நட்சத்திர குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆரத்யா ஆகிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சனுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை என்பது அவரது நலவிரும்பிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.