ஆப்நகரம்

இந்த வயசுல கல்யாணமா பண்ணி வைக்க முடியும்?-முதியவரை கலாய்த்த ரோஜா!

நடிகையும், அமைச்சருமான ரோஜா தனது தொகுதியில் முதியவர் ஒருவருடன் நகைச்சுவையாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 18 May 2022, 9:11 pm

ஹைலைட்ஸ்:

  • நகரி தொகுதியில் மக்களை சந்தித்த அமைச்சர் ரோஜா
  • தன்னை கவனிக்க ஆளில்லை என்ற முதியவர் கோரிக்கை
  • கல்யாணமா பண்ணி வைக்க முடியும் என்று கேட்டு கலாய்த்த ரோஜா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இடம்பிடித்தார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, . ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து 'வாசலுக்கு வாசல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்' எனும் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

தனது சொந்த தொகுதியான நகரிக்கு இன்று சென்ற அமைச்சர் ரோஜா, தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதியவர் ஒருவர், 'இந்த வயதில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை' என கோரிக்கையாக தெரிவித்தார்.

போக்குவரத்துக் கழகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க மாநில அரசு அசத்தல் திட்டம்!
அதற்கு ''அரசு சார்பில் உங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வேண்டுமானால் பெற்றுத்தர முடியும். திருமணமா செய்து வைக்க முடியும்?'' என்று ரோஜா நகைச்சுவையாக எடுத்துரைத்தார். முதியவருடன் ரோஜா உரையாடும் இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி