ஆப்நகரம்

அமைச்சரவை மாற்றம்: ரோஜா பெயரை டிக் அடித்த முதல்வர்?

ஆந்திர அமைச்சரவை மாற்றத்தில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வழியாகியுள்ளது.

Samayam Tamil 12 Mar 2022, 11:07 am
நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil roja and jegan mohan


ஆந்திராவில் ஜெகமோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. 150 தொகுதிகளை கைப்பற்றியது அக்கட்சி.

ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா முக்கிய இலாக்காவை பெறுவார் என்றும், துணை முதலவராக நியமிக்கப்படுவார் என்றும் அப்போது பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால் ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளில் மாற்றம் செய்யப்படும் என ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் வருவாய் ஆண்டிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை தொடங்கினார்.
ஜெயக்குமார் விடுதலை: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
பட்ஜெட் உரைக்கு பின்னர் பேசிய முதல்வர் ஜெகன் மோகன், “இந்த பட்ஜெட்டால் அனைத்து தரப்பினரும் வளம் பெறுவர். விரைவில் அமைச்சரவை விரிவாக்கப்படும். இதில், அமைச்சர் பதவிகள் பறி போனால், அவர்கள் வருத்தப்பட கூடாது. அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஆளுநரை டென்ஷனாக்கிய முதல்வரின் செம கோரிக்கை!
இதனிடையே ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26ஆக பிரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அதன்படி, சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி