ஆப்நகரம்

25 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநிலங்களை புரட்டிப் போட்டுள்ள பேய் மழை !!

25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக பொழிந்துள்ள தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களை புரட்டி போட்டுள்ளது. இதன் விளைவாக, இதுவரை 148 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 1 Oct 2019, 8:48 pm
உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் மழை பெறுகின்றன.
Samayam Tamil swm


பொதுவாக, செப்டம்பர் மூன்றாவது வாரத்துடன் முடிவடையும் பருவமழை காலம், இந்த ஆண்டு நீடித்து இதுநாள் வரை பெய்து வருகிறது.

குறிப்பிட்ட காலத்தை தாண்டி பொழிந்து வரும் கனமழை உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை புரட்டி போட்டுள்ளது.

148 பேர் பலி: குறிப்பாக, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்கள், இப்பருவமழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அதிகபட்சமாக, கனமழைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 111 பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்தப்படியாக பிகாரில் 29 பேர் மழைக்கு இரையாகியுள்ளனர். உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 13 பேர் மழையின் காரணமாக இறநந்துள்ளனர்.

4,000 பேர் மீட்பு : பிகார் தலைநகரான பாட்னா, கனமழையால் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மொத்தம் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு: 1994 -ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த ஆண்டு தான் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகமாக பொழிந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

61 ஆண்டுகளில் முதல்முறை: இதேபோன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை காலத்தில் சராசரியாக 2,350 மி.மீ.., மழை பொழியும். ஆனால், 61 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு அங்கு 3,670 மி.மீ., மழை பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி