ஆப்நகரம்

4 ஆண்டுகளுக்கு பின், வனத்துறை முயற்சியால் புலித்தடம் பதிக்கும் வனப்பகுதி!

முகுந்தரா புலிகள் சரணாலயத்தில் 4 ஆண்டுகளுக்கு பின், தடம் கண்டறியப்பட்டுள்ளது.

TNN 17 Sep 2017, 6:39 pm
ஜெய்ப்பூர்: முகுந்தரா புலிகள் சரணாலயத்தில் 4 ஆண்டுகளுக்கு பின், தடம் கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil after 4 years mukundara hills to get three tigers
4 ஆண்டுகளுக்கு பின், வனத்துறை முயற்சியால் புலித்தடம் பதிக்கும் வனப்பகுதி!


சமீபத்தில், புலிகள் இடமாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் 2 பெண் புலிகள், ஒரு ஆண் புலி ஹடோடி பகுதியில் உள்ள முகுந்தரா புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படும். இதற்காக செயல்பாடுகள் வரும் டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புலி பாதுகாப்பு திட்டம் ஒன்றை மாநில வனத்துறை அனுப்பி வைத்தது.

இதனைத் தொடர்ந்து என்.டி.சி.ஏ, இந்தியாவின் வனவிலங்கு நிறுவனம் ஆகியவை முகுந்தரா வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்த பின்பு, புலிகள் இடமாற்றத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதலில் 2018 டிசம்பரில் புலிகள் இடமாற்றம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2017 டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹடோடி பகுதியில் முகுந்தரா மலைகள் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் ரந்தம்போர், சரிஸ்கா ஆகியவற்றை தொடர்ந்து, புலிகள் தென்படும் 3வது இடமாக காணப்படுகிறது.

After 4 years, Mukundara Hills to get three tigers.

அடுத்த செய்தி