ஆப்நகரம்

மாயாவதி மீது அவதூறு : 9 நாட்களுக்கு பிறகு பாஜக பிரமுகர் கைது

பாலியல் தொழிலாளியுடன் மாயாவதியை ஒப்பிட்டு பேசிய உத்தர பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் துணைத்தலைவர் தயாசங்கர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 30 Jul 2016, 5:40 am
பாலியல் தொழிலாளியுடன் மாயாவதியை ஒப்பிட்டு பேசிய உத்தர பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் துணைத்தலைவர் தயாசங்கர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil after 9 days on the run cops nab dayashankar in bihar
மாயாவதி மீது அவதூறு : 9 நாட்களுக்கு பிறகு பாஜக பிரமுகர் கைது


பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 150 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பக்சர் என்னும் இடத்தில் வைத்து தயாசங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மாயவதியை அவதூறாக பேசியதாக கடந்த 19-ம் தேதி தயாசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து தயாசங்கர் தலைமறைவானார்.கடந்த ஒன்பது நாளாக தயாசங்கரை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர்,நேற்று மதியம் அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக மூன்று தொலைபேசி எண்களை ஆராய்ந்து தயாசங்கர் இருந்த இடத்தை கண்டறிந்ததாகவும், தலைமறைவான நாளில் இருந்து டெல்லி,மத்தியபிரதேசம்,ஜார்கண்ட்,பீகார் என தயாசங்கர் தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் உத்தரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தயாசங்கர் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாயாவதி,இந்த வழக்கில் உத்தர பிரதேச உயர்நீதிமன்றம் அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால்,தயாசங்கர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார் எனவும் உத்தர பிரதேச மாநில ஆளும் கட்சி,பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது கட்சியினருக்கு தேர்தலில் சீட் ஒதுக்குவதற்கு பாலியல் தொழிலாளியை விட கேவலமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நடந்து கொள்வார் என தயாசங்கர் தெரிவித்த கருத்தே அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி