ஆப்நகரம்

ஆந்திராவை தொடர்ந்து சிபிஐ அமைப்பை தடைசெய்தது மேற்கு வங்காள அரசு

மேற்கு வங்காளத்தில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரும்ப பெற்றுள்ளார்.

Samayam Tamil 17 Nov 2018, 2:21 am
மேற்கு வங்காளத்தில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரும்ப பெற்றுள்ளார்.
Samayam Tamil 1-1527071291
சிபிஐ அமைப்பை தடை செய்து மேற்கு வங்காள அரசு உத்தரவு


டெல்லியை தவிர சிபிஐ விசாரணை அமைப்பு, மற்ற மாநிலங்களில் வழக்கு குறித்து விசாரணை நடத்த அல்லது ஆய்வு செய்ய அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும். கடந்த ஆகஸ்டு 3ம் தேதி, சிபிஐ-க்கு அனுமதி வழங்கும் வகையில் ஆந்திரா அரசு உத்தரவை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அது திரும்பப் பெறப்படுவதாக ஆளும் சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆந்திர துணை முதல்வர் சின்ன ராஜப்பா, கர்நாடகாவில் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை அமைப்புக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு எந்த ஒரு தடையும் கிடையாது. தேவைப்படும் போது சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று விசாரணைக்கான அனுமதியை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையை மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அதை தொடர்ந்து தற்போது அம்மாநிலத்திலும் சிபிஐ விசாரணை அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, ஆர்பிஐ போன்ற தன்னாட்சி பெற்ற அரசு அமைப்புகளை மத்திய பாஜக அரசு சிதைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இனி ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஏதேனும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், அம்மாநில அரசுகள் அனுமதித்தால் மட்டுமே, தொடர்ந்து செயல்படும் நெருக்கடிக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி