ஆப்நகரம்

Jammu Kashmir: எல்லைப்பகுதியில் 12 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்: 5 பாதுகாப்பு வீரர்கள் காயம்!

இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி 12க்கும் அதிகமான இடங்களில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறி தாக்குதலில் 5 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 27 Feb 2019, 8:50 am
இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி 12க்கும் அதிகமான இடங்களில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறி தாக்குதலில் 5 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
Samayam Tamil jammu


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


இந்திய விமானப்படை தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் அதிகமான படங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து கொண்டு ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 5 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் லேசான காயமடைந்துள்ளனர். இதில், 2 பேர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி