ஆப்நகரம்

பிஜேபி வெற்றி எதிரொலி : உடனடியாக ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுத்த சுப்ரமணியசாமி!

பிஜேபி வெற்றி எதிரொலி : உடனடியாக ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுத்த சுப்ரமணியசாமி!

TOI Contributor 11 Mar 2017, 3:17 pm
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து உடனடியாக ராமர் கோவில் பிரச்னயை பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கையில் எடுத்துள்ளார்.
Samayam Tamil after bjp win subramanian swamy raises ram mandir flag
பிஜேபி வெற்றி எதிரொலி : உடனடியாக ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுத்த சுப்ரமணியசாமி!


ஐந்து மாநில தேர்தல் முடிவில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து சேதத்தின் மிகப்பெரும் பிரச்னையாக கருதப்படும் ராமர் கோவில், பாபர் மசூதி பிரச்னை குறித்து சுப்ரமணிய சாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் யார் ஆட்சி அமைப்பது என்று கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் பாஜக 18 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது இடத்திலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

இதனையடுத்து பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோவில் – பாபர் மசூதி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கை தூசு தட்ட போவதாக சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு சென்று ராமர் கோவில் வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களையும் கேட்டுப்பெற போவதாக அவர் கூறியிருக்கிறார். உத்தரபிரதேச அரசு தனக்கு எதிர்ப்பு தெரிவிக்காது, ஒத்துழைப்பு கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
On March 21st I will go before SC and ask for early day to day hearing of the Ram Mandir case. I expect now UP govt will not oppose me. — Subramanian Swamy (@Swamy39) March 11, 2017

அடுத்த செய்தி