ஆப்நகரம்

கார் ஏறி இறங்கியும் உயிர் பிழைத்த குழந்தை: பெங்களூருவில் அதிசயம்

பெங்களூரு மாநிலத்தில் குழந்தை மீது கார் ஏறி இறங்கியும், குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது.

TNN 20 May 2017, 5:17 pm
பெங்களூரு மாநிலத்தில் குழந்தை மீது கார் ஏறி இறங்கியும், குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது.
Samayam Tamil after car climbed baby nothing happened
கார் ஏறி இறங்கியும் உயிர் பிழைத்த குழந்தை: பெங்களூருவில் அதிசயம்


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் கடந்த 18ம் தேதி வீட்டின் முன்பு ஒரு வருடம் 2 மாதம் ஆன குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கார் டிரைவர் பின்புறமாக இயக்கியுள்ளார். அந்த நேரம் குழந்தை சாலைக்கு வந்ததை தெரியாத கார் டிரைவர் வேகமாக காரை இயக்கிதால் காரின் இரண்டு சக்கரங்கள் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. அதன் பிறகு குழந்தை சர்வ சாதரணமாக அப்படியே எழுந்து நின்றது.

குழந்தை மீது கார் ஏறி இறங்கும் காட்சி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி