ஆப்நகரம்

7 பேர் விடுதலையில் ஆலோசித்து முடிவு: ராஜ்நாத் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

TNN 3 Mar 2016, 1:20 pm
புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil after discussion we will decide says rajnath on rajiv murderes release
7 பேர் விடுதலையில் ஆலோசித்து முடிவு: ராஜ்நாத் தகவல்


இதுகுறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராஜீவ் கொலையில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதம் கிடைத்தது. இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

ஆலோசனையின் போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு கருத்தில் கொள்ளப்படும் என்றார்.

முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இவ் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி உடனே தெரிவிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி