ஆப்நகரம்

எல்லையில் பதற்றமான சூழல்; வடமாநிலங்களில் விமான சேவை நிலை என்ன? மத்திய அரசு முக்கிய உத்தரவு!

எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையின் நிலை குறித்து, மத்திய அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 27 Feb 2019, 3:42 pm
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Samayam Tamil Air India


பொதுமக்கள் பகுதியில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், அடர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒரு விமானியைக் கைது செய்து வைத்திருப்பதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படையின் விமானி அபிநந்தன், மிக் ரக போர் விமானத்தில் சென்று மீண்டும் திரும்பவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் எல்லையில் போர் பதற்றம் காரணமாக, வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து எல்லையில் பதற்றம் குறைந்ததை அடுத்து, இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதாவது, வடமாநிலங்களில் விமான சேவை மீண்டும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்தரகாண்டின் டேராடூன் ஆகிய விமான நிலையங்களிலும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சிம்லா, காகர், பூம்லா ஆகிய விமான நிலையங்களிலும் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அவையும் தற்போது தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி