ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு!

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

Samayam Tamil 7 Mar 2018, 4:37 pm
திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
Samayam Tamil after lenin periyar and mookerjee dr b r ambedkars statue vandalised
உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு!


திரிபுரா சட்டமன்ற தேர்தலில், அங்கு 25 ஆண்டு காலம் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்து, பாஜக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலையை பாஜகவினர் தகர்த்தனர்.

லெனின் சிலை தகர்க்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரிபுராவில் புரட்சியாளா் லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனால் அங்கு மோதல்கள் அரங்கேறின. பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா இன்று லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று நாளை தமிழகத்தில் பொியாாின் சிலையும் அகற்றப்படும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.


இதற்குதிராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து தனது பதிவை முகநூல் பக்கத்தில் இருந்து ஹெச்.ராஜா நீக்கினாா். இருப்பினும் அவா் ஏற்படுத்திய சா்ச்சை தமிழகத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு வேலூா் மாவட்டம் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பொியாாின் சிலையை சமூக விரோதிகள் சிலா் சேதப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக பா.ஜ.க. பிரமுகா் முத்துராமன் மற்றும் பிரன்சிஸ் உள்ளிட்டோரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், நேற்று இரவு உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலித் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் புதிய சிலை அமைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

அடுத்த செய்தி