ஆப்நகரம்

குண்டும் குழியுமான சாலையால் உயிரிழந்த மகன்! சொந்த செலவில் 500 குழிகளை மூடிய தந்தை

குண்டும் குழியுமான சாலையால் உயிரிழந்த தனது மகனின் நிலைமை வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக, சாலையில் ஏற்பட்ட 556 குழிகளை தாதாராவ் என்பவர் தனது சொந்த செலவில் மூடியுள்ளார்.

Samayam Tamil 30 Jul 2018, 3:55 pm
குண்டும் குழியுமான சாலையால் உயிரிழந்த தனது மகனின் நிலைமை வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக, சாலையில் ஏற்பட்டுள்ள 556 குழிகளை தாதாராவ் என்பவர் தனது சொந்த செலவில் மூடியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mumbai pathhole


மகராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் தாதாராவ் பில்ஹோர். கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி இவருடைய மகன் பிரகாஷ், பைக்கில் குண்டும் குழியுமான சாலையில் சென்றதால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அதுவரையில் உயிரோடு மகிழ்ச்சியாக இருந்த தனது செல்ல மகன், விபத்தில் மகன் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தாதாராவ் விரக்தியின் உச்சிக்கு சென்றார்.

இதனயைடுத்து தனது மகனின் நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்தார். கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்த சாலைகள் குண்டும் குழியுமாகின. இவ்வாறு சாலையில் ஏற்பட்ட குழிகளை மூட எண்ணினார். ஆனால், இவருக்கு உதவி செய்ய துவக்கத்தில் யாரும் முன்வரவில்லை.
இருந்தபோதிலும், மகனின் இறப்பை நினைவில் கொண்ட தாதாராவ், தன் சொந்த பணத்தில் குழிகள் ஒவ்வொன்றாக மூடத் தொடங்கினார். இவ்வாறாக இதுவரையில் 556 குழிகளை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது விடா முயற்சியைக் கண்டு தற்போது மற்ற பொதுமக்களும் தாமாக முன்வந்து சாலையில் ஏற்பட்ட குழிகளை நிரப்பி எவ்வித எதிர்பார்ப்பும் உதவி வருகின்றனர்.

அடுத்த செய்தி