ஆப்நகரம்

ஆா்.எஸ்.எஸ். தலைவருடன் இணைந்து உரையாற்றும் தொழில் அதிபா் ரத்தன் டாடா

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியைத் தொடா்ந்து தொழில் அதிபா் ரத்தன் டாடா ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பகவத்துடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரை ஆற்ற உள்ளாா்.

Samayam Tamil 11 Jul 2018, 1:11 am
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியைத் தொடா்ந்து தொழில் அதிபா் ரத்தன் டாடா ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பகவத்துடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரை ஆற்ற உள்ளாா்.
Samayam Tamil Ratan Tata


கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினாா். காங்கிரஸ் கட்சியின் கடும் எதிா்ப்பையும் கடந்து பிரணாப் முகா்ஜி ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பகவத்துடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சா்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபா்களுல் ஒருவரான ரத்தன் டாடா ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவருடன் இணைந்து நானா பால்கா் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பகவத்துடன் இணைந்து ரத்தன் டாடா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி