ஆப்நகரம்

மழையால் மின்சாரம் கட், மொபைலுக்கு சார்ஜ் போட வரிசையில் நிற்கும் கர்நாடக மக்கள்

சிக்மகளூர் : கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மழை தற்போது நின்றுள்ள நிலையில் தற்போது புதிய பிரச்னை கிளம்பியுள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 5:30 pm
சிக்மகளூர் : கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மழை தற்போது நின்றுள்ள நிலையில் தற்போது புதிய பிரச்னை கிளம்பியுள்ளது.
Samayam Tamil mobile charging


கர்நாடகாவில் பெய்து வந்து கன மழை காரணமாக பல பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த மழையில்சிக்மகளூரில் உள்ள மல்நாத் பகுதியில் மழை காரணமாக மின் தடத்தின் மேல் மரம் விழுந்து மின் தடை ஏற்பட்டது.

இதனால் இரு வாரங்களாக மொபைல் கூட பயன்படுத்தாமல் இப்பகுதி மக்கள் இருந்தனர். இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் இன்னும் மின்சாரம் திரும்ப வரவில்லை.

அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இரண்டு பிளக் பாயிண்டில் செல்போனுக்கு சார்ஜ் செய்ய மக்கள் வரிசையில் நின்று சார்ஜ் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி