ஆப்நகரம்

இன்று முதல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்குகின்றனவா? - கர்நாடக அரசு முக்கிய அறிவிப்பு!

நீண்ட ஊரடங்கில் முடக்கப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

Samayam Tamil 18 May 2020, 12:04 pm
நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பலகட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பலவேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே பொதுப் போக்குவரத்து, பயணிகள் வாகனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.
Samayam Tamil கர்நாடகாவில் போக்குவரத்து


இந்நிலையில் பொதுப் போக்குவரத்தை செயல்படுத்த கர்நாடக அரசு களத்தில் இறங்கியுள்ளது. அதாவது KSRTC மற்றும் BMTC பேருந்துகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கேப்கள், ஆட்டோக்கள் ஆகியவையும் இரண்டு மாத இடைவெளிக்கு பின் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் - பின்னணியை விளக்கும் ஆராய்ச்சியாளர்!

நேற்றைய தினம் ஊரடங்கு 4.0 தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வர் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக பேசிய துணை முதலமைச்சர் லக்‌ஷ்மன் சவாதி, இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் புதிய கட்டுப்பாடுகள் பற்றி அறிவிப்பு வெளியாகும். பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் இயக்கத்திற்கு அனுமதிக்கும் முன்பாக சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

எனவே இன்று முதலமைச்சரை சந்தித்த பிறகு பொதுப் போக்குவரத்து தொடர்பாக மாநில அரசின் உத்தரவுகள் வெளியாகும். போதிய சரீர இடைவெளி அளிக்கும் வகையில் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை.

கடைசி நாளில் இப்படியொரு ’ஷாக்’; ஆட்டம் காண வைத்த கோவிட்-19!

பொதுப் போக்குவரத்தை இயக்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் மத்திய அரசு குறிப்பிட்டிருப்பதை கருத்தில் எடுத்துக் கொண்டோம் என்றார். இருப்பினும் மறு அறிவிப்பு வரும் வரை மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்ப்பதை விட வீட்டிலிருந்தே வேலை செய்வதை முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி