ஆப்நகரம்

சலூனில் ஒளிந்திருந்த ஆபத்து; இத்தனை பேரை அடுத்தடுத்து தாக்கிய கொரோனா!

சலூனுக்கு முடிவெட்ட மற்றும் ஷேவிங் செய்வதற்காக சென்ற பலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2020, 11:01 am
மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் கொரோனா பீதி அதிகரித்துள்ளது. ஏனெனில் அங்குள்ள சலூன் கடையில் முடிவெட்ட மற்றும் ஷேவிங் செய்வதற்காக சென்ற சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சலூன் கடைக்கு சென்ற 12 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்து பார்க்கையில் 6 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
Samayam Tamil சலூனில் பரவிய கொரோனா


இதுபற்றி கர்கோனே மாவட்டத்தின் தலைமை சுகாதாரத்துறை அதிகாரி திவ்யேஷ் வெர்மா கூறுகையில், பர்கோவன் கிராமத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் இந்தூரில் ஓட்டல் பணியாற்றி வந்த வாலிபர் தனது சொந்த ஊரான பர்கோவனுக்கு சமீபத்தில் திரும்பியுள்ளார்.

கடைசி வாரத்தில் ஊரடங்கு; அடுத்து என்ன? பக்கா பிளானை ரெடி பண்ணும் மத்திய அரசு!

அவர் ஏப்ரல் 5ஆம் தேதி சலூனிற்கு முடிவெட்டச் சென்றுள்ளார். அதற்கடுத்த சில நாட்களில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்க்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

உடனே அவர் சென்ற இடங்கள் பற்றி விசாரிக்கப்பட்டன. இவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராமம் முழுவதும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 6 பேரின் குடும்பத்தினர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சலூனில் ஒரே துண்டு மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிறருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனோ நோயாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்; நம்பிக்கையூட்டும் பிளாஸ்மா சிகிச்சை - கெஜ்ரிவால்!

பாதிக்கப்பட்ட நபர்கள் 28 வயது முதல் 73 வயது வரை உள்ளவர்கள். தற்போது வரை கர்கோனே மாவட்டத்தில் 60 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 19 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி