ஆப்நகரம்

ஆம்புலன்ஸ் வராததால், ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்த கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால், உடல் நலம் குன்றிய தாய்க்கு உதவ ஆக்ஸிஜன் சிலிண்டரை அவரது மகன் தோளில் சுமந்து காத்திருந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Samayam Tamil 7 Apr 2018, 1:54 pm
உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால், உடல் நலம் குன்றிய தாய்க்கு உதவ ஆக்ஸிஜன் சிலிண்டரை அவரது மகன் தோளில் சுமந்து காத்திருந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil up oxygen


உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மருத்துவக் கல்லூரியில் வயதான பெண்மணி ஒருவர் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடியும், அவரது மகன் ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடியும் நின்றுள்ளனர். சிகிச்சைக்காக உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராதாதல் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அந்த மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு வயதான பெண்மணியை மாற்றும் போது, வார்டு பாய் ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கி கொண்டு சென்றதாகவும், அப்போது வார்டு பாய், மற்றொருவரிடம் சிலிண்டரை கொடுத்திருந்த வேளையில்,வீடியோ எடுக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், உண்மையில் ஏதாவது தவறு நடந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

அடுத்த செய்தி