ஆப்நகரம்

அகஸ்டா வெஸ்ட்லேன்ட் விவகாரம்: ரூ.86.07 கோடி சொத்துக்கள் முடக்கம்

அகஸ்டா வெஸ்ட்லேன்ட் விவகாரம் தொடர்பாக ரூ.86.07 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

TNN 20 Jun 2016, 4:35 pm
புதுதில்லி: அகஸ்டா வெஸ்ட்லேன்ட் விவகாரம் தொடர்பாக ரூ.86.07 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Samayam Tamil agustawestland scam case ed freezes shares worth rs 86 07 crore
அகஸ்டா வெஸ்ட்லேன்ட் விவகாரம்: ரூ.86.07 கோடி சொத்துக்கள் முடக்கம்


மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக விமானப் படையில் எம்ஐ - 8 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஏ.டபிள்யூ-101 ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியதாக தெரிய வந்ததால், ஒப்பந்தம் அப்போதே ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், லஞ்சம் கொடுத்த இத்தாலியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அதில், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஆனால், லஞ்சத்தை பெற்றவர்களும் தண்டனையை பெற வேண்டும் என இந்த விவகாரத்தில் பாஜக தற்போது முனைப்பு காட்டி வருகிறது.

பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறியது என கூறப்படும் இந்த விவகாரம் தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. பூதாகரமாக கிளம்பியுள்ள இந்த விஷயம் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் இன்று சுமார் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில் துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் ரூ.86.07 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி