ஆப்நகரம்

மீண்டும் ஊரடங்கு அமல்: அரசு திடீர் அறிவிப்பு!

இனி இரவு முழுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 11:21 pm

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன்பின் அன்லாக் அறிவிப்புகளால் பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil அகமதாபாத்


இந்நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அகமதாபாத் முழுக்க இரவு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி உள்பட பண்டிகைக் காலத்தின் விளைவாக அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. நகரின் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் வாழும் தாராவியில் திடீர் ஷாக்; ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா!

அகமதாபாத்தில் மட்டும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக குஜராத் கூடுதல் தலைமை செயலாளர் ராஜிவ் குமார் குப்தா அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ராஜிவ் குமார் குப்தா தெரிவித்துள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரே நாளில் அகமதாபாத்தில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக அகமதாபாத்தில் 46,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஐந்த் பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிர்பலி எண்ணிக்கை 1,949ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி