ஆப்நகரம்

நிலவை ஆராயும் இந்தியா.! இரு சிஷ்யைகளை பிடிக்க திணறும் சோகம்...

நித்தியானந்தா கடத்தியுள்ளதாக கூறப்படும் இரு சிஷ்யைகளின் பாஸ்போர்ட்டை தடை செய்யக்கோரி அகமதாபாத் போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

Samayam Tamil 12 Feb 2020, 5:41 pm
தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்யானந்தாவை பிடிக்க அகமதாபாத் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் தான் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதை கடுகு அளவுகூட நினைவில் கொள்ளாமல் ஏதோ ஒரு தீவில் கைலாயத்தை அமைக்க போவதாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நித்தி.
Samayam Tamil நித்தியானந்தா இரு சிஷ்யைகளை பிடிக்க திணறும் போலீசார்


தன்னுடைய இரு மகள்களான தத்வ பிரியா (21), நித்யநந்திதா (18) ஆகியோர் நாடு கடத்தப்பட்டதாக நித்தியானந்தாவுடைய முன்னாள் செயலாளர் ஜனார்த்தன சர்மா அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் ஆட்கொணர்வு மனுவும் குஜராத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு விசாரணையில்கூட அவர்கள் நேரில் ஆஜராகவில்லை.

இதற்கிடையில் அகமதாபாத் காவல்துறையினர் இன்டர்போல் அதிகாரிகளை உதவிக்கு நாடிய பிறகுதான் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதுவும் பயனில்லை. தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்கும் அகமதாபாத் போலீசார் '' சிஷ்யைகளின் பாஸ்ட்போர்டுகளை தடை செய்தால் மட்டுமே அவர்களை பிடிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேரேஜிக்கு வருவீங்களா.? வீடியோ காலில் நிச்சயதார்த்தம்... இந்த கூத்தை பாருங்க..!

அவர்கள் செல்லும் நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் அவர்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும் லோக்கல் போலீசாரால் விரைவாக அவர்களை பிடிக்க இயலாது. ஒருவேளை பாஸ்போர்ட் தடை செய்து, அவர்களது பயண விவரங்களை பாஸ்போர்ட் அத்தாரிட்டி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர்கள் ஏதாதொரு விமான நிலையத்தில் சிக்கிக்கொள்வார்கள். அதன் மூலமாக அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பது எளிதாக தெரிந்துவிடும். எனவே நீதிமன்றம் இத்தைகைய உத்தரவை பிறப்பிக்கக்கோரி போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி