ஆப்நகரம்

இவருக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது; கடைசி நாள் ராஜ்ய சபாவில் மைத்ரேயன் கண்ணீர் உரை!

இன்றுடன் ராஜ்ய சபா பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், அதிமுக எம்பி மைத்ரேயன் கண்ணீர் மல்க உரையாற்றினார்.

Samayam Tamil 24 Jul 2019, 5:57 pm
நாடாளுமன்றத்தின் மேலவை என்று அழைக்கப்படும் ராஜ்ய சபாவிற்கு மாநில எம்.எல்.ஏக்கள், மக்களவை எம்.பிக்கள் சேர்ந்து உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஏற்ப, ராஜ்ய சபாவில் 6 எம்.பிக்கள் இடமுண்டு.
Samayam Tamil Maitreyan


கடந்த 2013ஆம் ராஜ்ய சபாவிற்கு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழகத்தில் இருந்து தேர்வான 6 எம்.பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. முன்னதாக திமுக எம்பி கனிமொழி மக்களவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, தனது ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

எனவே அதிமுக எம்பிக்கள் லட்சுமணன், அர்ஜூனன், மைத்ரேயன், ரத்னவேல், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோர் இன்று விடை பெற்றுக் கொண்டனர். ராஜ்ய சபாவில் கடைசி நாளான இன்று, மைத்ரேயன் உரை நிகழ்த்தும் போது கண்ணீர் சிந்தினார்.

சட்ட விரோத தடுப்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களை பாதிக்குமா?

அப்போது பேசும் போது, என் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதன் காரணமாக மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்ணீருடன் ராஜ்ய சபாவில் இருந்து விடைபெற்ற தமிழக எம்.பிக்கள்!

அவர் மீது மிகுந்த விசுவாசத்துடன் இருந்தேன். என்னுடைய கழகத்திற்கு எப்போதும் உண்மையுடன் இருப்பேன். எனக்கு வழிகாட்டியாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என்று கண்ணீருடன் கூறி முடித்தார்.

கர்நாடகாவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் ஆட்சி மாற்றமா? அதிரடி பிளானில் பாஜக!

அடுத்த செய்தி