ஆப்நகரம்

ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி மீது 9 பெண்கள் பாலியல் புகார்; அதுக்கு இப்படியொரு நடவடிக்கையா!

புதுடெல்லி: ரேடியோவில் பணியாற்றும் அதிகாரி மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Dec 2018, 3:43 pm
ஆல் இந்தியா ரேடியோவில் அதிகாரி ஒருவர் மீது 9 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அவரை பதவி இறக்கம் செய்து, ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகம் குறைத்துள்ளது.
Samayam Tamil AIR


இதுதொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது பரிந்துரைகளை ஒழுங்கு நடவடிக்கை குழு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி ஓராண்டிற்கு இரு நிலைகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் காலக்கட்டத்தில் எந்தவித ஊதிய உயர்வும் அளிக்கப்படாது. ஓராண்டிற்கு பிறகு, அடுத்தடுத்த ஊதிய உயர்வுகளையும் ஒழுங்கு நடவடிக்கை பெரிதும் பாதிக்கும். மேலும் அந்த அதிகாரி நிர்வாக அளவீட்டு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் செயலாளர், தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, பிரசார் பாரதிக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியது. அதில், அதிகாரியிடம் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

அடுத்த செய்தி