ஆப்நகரம்

டெல்லி டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பைலட்.! 3 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்...

டெல்லி - பெங்களூர் புறப்பட தயராக இருந்த ஏர் இந்திய விமானம், விமானியின் தாமதத்தால் 3 மணி நேரம் தாமதமாகியுள்ளது.

Samayam Tamil 17 Oct 2019, 4:02 pm
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ.502 பேஸஞ்சர் விமானம் நேற்று டெல்லியிலிருந்து பெங்களூருக்கு புறப்பட மதியம் 1.30 மணி அளவில் தயாராக இருந்தது. இந்நிலையில் பராமரிப்பு காரணமாக விமானம் புறப்பட 30 நிமிடம் தாமதமாகும் என பயணிகளுக்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil 2


மாட்டை விட்டுட்டு பெண்களை பாருங்க: மோடிக்கு அழகி அட்வைஸ்!

இருப்பினும் நிர்வாகம் அறிவித்திருந்த நேரத்தில் விமானம் புறப்படாமல், இன்னும் தாமதமாகி 4 .20 மணி அளவில் விமானம் அங்கிருந்து புறப்பட்டது. இது குறித்து நிர்வாகத்தில் இருந்து எந்த வித விளக்கமும் அறிவிக்கப்படவில்லை என பயணிகள் சிலர் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.



ஒரு வழியாக இரவு 7.09 மணிக்கு விமானம் பெங்களூருக்கு வந்தடைந்தது. இது குறித்து டுவீட் செய்த பயணிகள், விமானம் தாமதமானதற்கு விமானி சரியான நேரத்தில் பணிக்கு வராமல் இருந்ததே காரணம் என போர்டிங் சூப்பரவைசர் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.... தேதி குறித்த அமைச்சரவை!!

சாலை நெரிசலில் காரணமாக அவரால் பனி நேரத்திற்கு வர முடியவில்லை. ஆனால் ஏர் இந்திய நிர்வாகம் அதை மறுத்து விட்டது. விமானம் தாமதமாக்கப்பட்டதை குறித்து அவர்கள் கூறிய காரணத்திலும் நம்பகத்தன்மை இல்லை என பயணிகள் சிலர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


அயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்த மூன்று நிபந்தனைகள் !!

விமான சேவையில் கொடி கட்டி பறக்கும் ஏர் இந்திய விமான நிர்வாகமே அலட்சியமாக நடந்து கொண்ட சம்பவம் நேற்று இந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிருப்தியை ஏறபடுத்தியுள்ளது.

அடுத்த செய்தி