ஆப்நகரம்

மே 2 வரை கார்த்தியை கைது செய்யத் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை மே 2ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 16 Apr 2018, 4:04 pm
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை மே 2ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil dc-Cover-anfegbfra3ee1mvanbf11fr9a2-20170903003104.Medi.


ஏர்செல் மேக்சிஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தம்மை கைது செய்யக்கூடாது என கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்ரல் 16ஆம் தேதி (இன்று) வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுறுத்தியது. இன்றுடன் இடைக்காலத் தடை உத்தரவு முடிவுகிறது.

இந்நிலையில் கைது செய்வதற்கான தடையை மே மாதம் 2ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி