ஆப்நகரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Jul 2018, 10:50 am
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chidambaram-01-1498898736


ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட இந்த அனுமதி மூலம் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ , அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்ய ஜூலை 10ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

நீதிமன்ற உத்தரவின் படி இன்றுடன் அவர்கள் கைதுக்கான தடை முடியும் நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை இருவரையும் கைது செய்வதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக பாட்டியாலா நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி