ஆப்நகரம்

ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 112 பெண் சாதனையாளர்கள் கௌரவிப்பு; குடியரசுத் தலைவர் புகழாரம்!

நாடு முழுவதும் 112 பெண் சாதனையாளர்களை குடியரசுத் தலைவர் கௌரவிக்க உள்ளார்.

Samayam Tamil 24 Jan 2018, 10:56 am
டெல்லி: நாடு முழுவதும் 112 பெண் சாதனையாளர்களை குடியரசுத் தலைவர் கௌரவிக்க உள்ளார்.
Samayam Tamil aishwarya rai bachchan and nicole faria felicitated by the president of india
ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 112 பெண் சாதனையாளர்கள் கௌரவிப்பு; குடியரசுத் தலைவர் புகழாரம்!


நாடு முழுவதும் உள்ள பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது.

அதில் 1994ல் மிஸ் வோர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், 2010ல் மிஸ் எர்த் பட்டம் வென்ற நிகோல் ஃபாரியா உள்ளிட்ட 112 பேர் அடங்குவர்.

இந்தியாவின் முதல் சர்வதேச அடையாளமாகவும், பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராகவும் ஐஸ்வர்யா ராய் திகழ்ந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக டெல்லி ராஷ்டிரபதி பவனில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி தொடங்கி வைத்தார்.

பெண் சாதனையாளர்களை ’முதல் பெண்கள்’(First Ladies) என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், தடைகளை உடைத்தெறிந்து, தங்கள் துறைகளில் சாதனை புரிந்ததால் இவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் என்றார்.

Aishwarya Rai Bachchan and Nicole Faria felicitated by the President of India.

அடுத்த செய்தி