மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான புகார்களின் எதிரொலியாக இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குச்சீட்டு சரிபார்க்கும் இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று அறிவித்தார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வலுத்தன. இப்புகார்களை முற்றிலும் மறுத்த, தேர்தல் ஆணையம் முடிந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துகாட்டலாம் என்று சவால் விடுத்தது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வந்த புகார்களைத் தொடர்ந்து, இனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பின்போதே ஒழுங்குசெய்ப்படாது என்று தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கொடுத்தவர்கள் யாரும் அதனை நிரூபிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு சரி பார்க்கும் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் நசிம் ஜைதி அறிவித்தார். Complaints came after elections in 5 states,but we did not receive credible material information on EVM tampering from complainants : CEC pic.twitter.com/qS8C5SEpsv — ANI (@ANI_news) May 20, 2017
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வலுத்தன. இப்புகார்களை முற்றிலும் மறுத்த, தேர்தல் ஆணையம் முடிந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துகாட்டலாம் என்று சவால் விடுத்தது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வந்த புகார்களைத் தொடர்ந்து, இனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பின்போதே ஒழுங்குசெய்ப்படாது என்று தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கொடுத்தவர்கள் யாரும் அதனை நிரூபிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு சரி பார்க்கும் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் நசிம் ஜைதி அறிவித்தார். Complaints came after elections in 5 states,but we did not receive credible material information on EVM tampering from complainants : CEC pic.twitter.com/qS8C5SEpsv — ANI (@ANI_news) May 20, 2017