ஆப்நகரம்

பனி கொட்டுவதால் ஜன., 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

அதிகமான பனிப்பொழிவு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 14ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ளது ஹரியானா அரசு.

Samayam Tamil 7 Jan 2018, 8:34 pm
அதிகமான பனிப்பொழிவு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 14ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ளது ஹரியானா அரசு.
Samayam Tamil all govt and private schools in haryana to remain closed till 14th january due to intense cold wave
பனி கொட்டுவதால் ஜன., 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை


ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அபரிமிதமான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் நலனைக் கருத்தில் கொண்டு இன்னும் ஒரு வாரத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Haryana: All govt and private schools to remain closed till 14th January due to intense cold wave.</p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/949991868019781632?ref_src=twsrc%5Etfw">January 7, 2018</a></blockquote>
இதன்படி நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

இதே போல, உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் ஆகியவை வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி