மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. மேலும், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட கலெக்டர் நிஷாந்த் வர்வாடே அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
போபாலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
போபாலில் கனத்த மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNN 20 Aug 2016, 12:50 am