ஆப்நகரம்

அனைத்து ஐஐடி கல்வி நிறுவங்களிலும் மாணவர் சேர்க்கைக்குத் தடை

நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுனங்களில் மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

TNN 7 Jul 2017, 1:27 pm
நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுனங்களில் மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Samayam Tamil all iits not to proceed admission orders sc
அனைத்து ஐஐடி கல்வி நிறுவங்களிலும் மாணவர் சேர்க்கைக்குத் தடை


அண்மையில் நடந்து முடிந்த ஐஐடி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் இந்தி வினாத்தாளில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. எழுத்துப்பிழை உள்ளிட்ட காரணங்களால் அக்கேள்வி தவறானதாக கருதப்பட்டது. இதற்காக, அக்கேள்விக்கு பதில் அளித்த அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படுவதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்தது.

இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தார். நடந்து முடிந்த ஐஐடி நுழைவுத் தேர்வில் இந்தி வினாத்தாளில் மட்டுமே தவறான கேள்வி இடம்பெற்றது. அதற்காக, இந்தியில் தேர்வெழுதியவர்களுக்கு மட்டும் சலுகை மதிப்பெண் அளித்திருக்க வேண்டும். மாறாக, அக்கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது ஏன்? என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுனங்களில் மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

அடுத்த செய்தி