ஆப்நகரம்

புறநகர், பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து..! - மத்திய அரசு

மறு அறிவிப்பு வரும் வரையில் அனைத்து புறநகர், பயணிகள் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 6:12 pm
இந்தியாவில் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மும்பை புறநகர் ரயில் சேவை வழக்கம்போல இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


இதற்கு முன்னதாக கொரோனா பரவல் அபாயத்தை சுட்டிக்காட்டி, ரயில் சேவைகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி (நாளை) வரை இயக்கப்படாது எனக் கூறப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த உத்தரவு செப்டம்பர் 30ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி