ஆப்நகரம்

Passenger Trains: ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து?

ஜூன் 30ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து பயணசீட்டுகளும் ரத்து செய்யப்படுகிறது

Samayam Tamil 14 May 2020, 10:55 am
பயணிகள் ரயில் சேவைக்கான பயணச்சீட்டு முன்பதிவு மே மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரைக்கும் பதிவு செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil all tickets booked for regular passenger trains for travel on or before june 30 cancelled
Passenger Trains: ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து?


இந்தியாவில் கொரோனா தொற்று பரவலால் நிறுத்தி வைக்கபட்ட பயணிகள் ரயில் சேவை மே மாதம் 12 ஆம் தேதி முதல் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு முதல்கட்டமாக 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டது.


இதற்காக நாடு முழுவதுமிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை ரயில்களை ரத்து செய்தது ரயில்வே துறை.

இதனைத் தொடர்ந்து, அட்டவணைப்படி, ஜூன் 30ம் தேதி வரை இயங்கும் ரயில்களுக்கான, முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பி தரும்படி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்து முன்பதிவுப் பயணச்சீட்டுகளையும் ரத்து செய்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள், ஜூன் 30 வரை இயங்காது என்பது தெளிவாகிறது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரைக்குமா என்று யூகங்கள் எழும்பியுள்ளன.

அடுத்த செய்தி