ஆப்நகரம்

நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து?

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானிய குழு) நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

Samayam Tamil 24 Jun 2020, 5:56 pm
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ளது.
Samayam Tamil ugc


இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆராய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிபுணர் குழுவை அமைத்தது. ஹரியாணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, தற்போது மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது.

அதில், "கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, தற்போது தேர்வுகளை நடத்தினால் அது மாணவர்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யலாம்.

அனைத்து தேர்வுகளும் ரத்து: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!!

முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேசமயம், தங்களது பல்கலைக்கழக நிர்வாகம் இப்படியொரு முடிவெடுத்தால், அந்த முடிவில் உடன்பாடில்லாத மாணவர்களுக்கு மட்டும் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், பல்கலைக்கழகங்களை அக்டோபர் மாதம் வரை திறப்பது சரியாக இருக்காது. எனவே, மாணவர்களின் நலன்கருதி அக்டோபர் மாதத்துக்கு பிறகு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுத்து கொள்ளலாம" என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வீட்டிலிருந்தே பாடங்களை கற்க புதிய இணையதளம்: பள்ளி கல்வித்துறை அறிமுகம்

புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவை ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏற்கெனவே ரத்து செய்து, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி