ஆப்நகரம்

ECMO: எக்மோ சிகிச்சை என்றால் என்ன? கட்டணம் எவ்வளவு?

ஒரு எக்மோ கருவியின் விலை தோராயமாக 45 லட்சம் முதல் 1 கோடி வரையிலும் விற்கப்படுகிறது. அதே சமயம் எக்மோ கருவியின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம், இந்தியாவில்தான் குறைவாக வசூலிக்கப்படுகிறது

Samayam Tamil 21 Aug 2020, 9:03 am
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் உயர் சிகிச்சையாகக் கருதப்படுவது எக்மோ கருவி மூலம் வழங்கப்படும் சிகிச்சை. இந்நிலையில், எக்மோ குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்தக் கட்டுரை.
Samayam Tamil ecmo treatment


  1. எக்மோ கருவி என்றால் என்ன?
    மூச்சுவிட முடியாத நிலையில், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தால் மூச்சு விடும் செயல்முறையை செயற்கையாக நிகழ்த்தப் பயன்படும் கருவிதான் எக்மோ கருவி. Extra corporeal membrane oxygenation என்பதன் சுருக்கமே ECMO எனப்படுகிறது. இது மனித உயிரைக் காக்கும் நோக்கில், நவீன கருவியின் மூலம் அளிக்கப்படும் அதி உயர் சிகிச்சையாகும்.
  2. எப்படி செயல்படுகிறது எக்மோ கருவி?
    மூச்சுக் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடைப் பிரித்து, ஆக்ஸிஜனை இரத்தத்தில் கலக்கும் சுத்திகரிப்பு வேலை நுரையீரலுடையது. அதேபோல கிடைத்த சுத்தமான இரத்தைத்த உடல் முழுக்க நரம்பு மண்டலங்கள் வழியாக பாய்ச்சும் வேலை இதயத்தினுடையது.
    தீவிர மூச்சுத் தினறல் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, நுரையீரலின் வேலையான சுத்திகரிப்பை எக்மோ கருவி செய்யும். அதன்பின்னர் சுத்தமான பிராணவாயு நுரையீரலுக்கு அனுப்பப்படும்.
    இப்போது நுரையீரல் வேலை செய்யாத போதும் மனித உடல் இயங்கத் தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு விடும். இதன் விளைவாக, மூச்சு விடுதல் மற்றும் இரத்த ஓட்டம் தடைபடாமல் இயங்கும். இதன் மூலம், நோயாளி விரைவில் காப்பாற்றப்படுவார்.
  3. கோவிட் நோயாளிகளுக்கு எக்மோ எப்படி பயன்படுகிறது?
    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நோயான கோவிட்19இன் தீவிரநிலையில், மனிதர்கள் மூச்சுவிடுவது சிரமாமகும். அதிகமான கொரோனா மரணங்களுக்கான காரணங்கள் பட்டியலில் மூச்சுத்தினறல்தான் அதிகமாக இருந்தது இங்கு கவனிக்க வேண்டியது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு மூச்சை சீராக்குவது முதல் தேவையாக இருக்கிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சையில் எக்மோ கருவி சிறப்பாக உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஜெயலலிதாவுக்கு இதயதுடிப்பு நின்ற பிறகு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது: மருத்துவர் வாக்குமூலம்

  4. எப்போது தொடங்கியது எக்மோ முறை?
    2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி கொரோனா வைரஸின் முகம் முதன்முதலாக உலகத்துக்கு தெரிய வந்தது. ஆனால், அப்போது பரவவில்லை. மார்ச் மாதத்துக்குப் பிறகே உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அந்த சூழலில்தான் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீன மருத்துவர்கள் இந்த செய்ற்கை சுவாச முறையைப் பயன்படுத்தினர். வெண்டிலேட்டர்கள் மூலம் சுவாசம் மட்டும் வழங்கப்படும் நிலையில், எக்மோ கருவி மூலம் மூச்சுகாற்றை சுத்திகரித்தே வழங்க முடிந்தது. இதனையடுத்து எக்மோ சிகிச்சை பிரபலமானது. அதாவது, வெண்டிலேட்டர்கள் மூச்சுக்குழலின் வேலையைச் செய்தது என்றால், எக்மோ கருவி நுரையீரலின் வேலையையே செய்தது.

  5. எக்மோ கட்டணம் எவ்வளவு?
    ஒரு எக்மோ கருவியின் விலை தோராயமாக 45 லட்சம் முதல் 1 கோடி வரையிலும் விற்கப்படுகிறது. அதே சமயம் எக்மோ கருவியின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம், இந்தியாவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. (இந்த விலை மற்றும் கட்டணம் ஆகியவை பிரபல மருத்துவமனை ஒன்றின் பிரத்யேக தகவல். மருத்துவமனைக்கு மருத்துவமனை இது மாறுபடலாம். )

அடுத்த செய்தி