ஆப்நகரம்

ஜிஷாவைக் கொன்றவர் ஆட்டுடன் உடலுறவு - விசாரணையில் அம்பலம்

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அமீருல் இஸ்லாம், ஆடுடன் உடலுறவு வைத்திருந்தது போலீசார் விசாரணையில் உறுதியானது.

TOI Contributor 20 Jun 2016, 3:32 pm
கொச்சின்: கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அமீருல் இஸ்லாம், ஆடுடன் உடலுறவு வைத்திருந்தது போலீசார் விசாரணையில் உறுதியானது.
Samayam Tamil ameerul bestiality with goat olice confirmed
ஜிஷாவைக் கொன்றவர் ஆட்டுடன் உடலுறவு - விசாரணையில் அம்பலம்


கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டம் படித்து வந்த ஜிஷா என்ற மாணவி கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்ற இளைஞரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாவூரில் தங்கி இருந்தபோது, அங்கிருந்த ஆட்டுடன் அமீருல் உடலுறவு வைத்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அமீருல் உடன் தங்கியிருந்த வடமாநில தொழிலாளியிடம் இருந்து வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.

இதன்மூலம் அமீருல் ஆட்டுடன் உடலுறவு கொண்டு, அதன் மர்ம உறுப்பை சேதப்படுத்தியது உறுதியானது. மேலும் ஓய்வு நேரங்களில் தனது தொலைபேசியில் ஆபாச படங்கள் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாவூர் பொதுமக்கள், தங்கள் ஆடு, மாடுகளை கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர்.

அடுத்த செய்தி