ஆப்நகரம்

அமைச்சர் ராஜ்நாத் சிங் பாக்., பயணம்

Amid tensions, Rajnath Singh to visit Pakistan to attend SAARCRajnath Singh to visit Pakistan to attend SAARC, SAARC, Islamabad, Hizbul Mujahideen leader Burhan Wani, Prime Minister Nawaz Sharif, இந்தியா, பாகிஸ்தான், ராஜ்நாத் சிங், தீவிரவாதி புர்ஹான் வானி அமைச்சர் ராஜ்நாத் சிங் பாக்., பயணம் இந்தியா, பாகிஸ்தான் உறவில் பதன்கோட் சம்பவம் விரிசலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

TOI Contributor 28 Jul 2016, 1:11 pm
இந்தியா, பாகிஸ்தான் உறவில் பதன்கோட் சம்பவம் விரிசலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
Samayam Tamil amid tensions rajnath singh to visit pakistan to attend saarc
அமைச்சர் ராஜ்நாத் சிங் பாக்., பயணம்


பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் முதன் முதலாக பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் அந்த நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 8 ஆம் தேதி காஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆத்திரமூட்டும் வகையில் பேசி இருந்தார். ''ஒரு நாள் காஷ்மீர் பாகிஸ்தானின் சொந்தமாகும்'' என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி