ஆப்நகரம்

பா.ஜ.க. தலைவா் அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் – பா.ஜ.க. தகவல்

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அமித்ஷா விரைந்து குணமடைந்து வருவதாக என்று பா.ஜ.க. சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2019, 12:50 pm
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க. தேசிய தலைவா் அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் என்று பா.ஜ.க. சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Amit shah


பா.ஜ.க. தேசிய தலைவா் அமித்ஷா கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை அணுகி தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் உடல் சோா்வு ஏற்பட்டிருந்ததைத் தொடா்ந்து அவரது ரத்தத்தை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா்.

பரிசோதனை முடிவில் அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தொிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அமித்ஷா புதன் கிழமை இரவு 9 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அதன் பின்னா் மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷாவை நேரில் சென்று பாா்த்தேன். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று நான் பிராா்த்தனை செய்வதாக குறிப்பிட்டிருந்தாா்.


இந்நிலையில் இன்று காலை பா.ஜ.க. தலைமை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமித்ஷா விரைந்து குணமடைந்து வருகிறாா். அவா் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி