ஆப்நகரம்

‘மாடு மேய்க்கலாம்’ திரிபுரா முதல்வர் டுவிட்டுக்கு, அமுல் நிர்வாக இயக்குநர் ஆதரவு!

திரிபுரா முதல்வரின் இளைஞர்கள் மாடு மேய்க்கலாம், நல்ல லாபம் கிடைக்கும் என்ற டுவிட்டுக்கு, அமுல் நிர்வாக இயக்குனர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 May 2018, 6:07 pm
திரிபுரா முதல்வரின் இளைஞர்கள் மாடு மேய்க்கலாம், நல்ல லாபம் கிடைக்கும் என்ற டுவிட்டுக்கு, அமுல் நிர்வாக இயக்குனர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 2


திரிபுரா முதல்வர் சமீபத்தில் கால்நடை கவுன்சில் நடத்திய கூட்டத்தில் பட்டதாரிகள் அரசு வேலைக்கு காத்திருக்காமல் பான் ஷாப், மாடு வளர்க்கலாம் என தெரிவித்தார்.

திரிபுரா முதல்வர் அரசியல் கட்சிகள் பின் அரசு வேலை வேண்டும் என்று கூறாமல் பான் ஷாப் அமைத்துக்கொள்ளுங்கள், எளிதாக 5 லட்சம் வரை உங்கள் வங்கி இருப்புத் தொகை உயரும்.

எல்லாருடைய வீட்டிலும் மாடு இருக்க வேண்டும். ஒரு லிட்டர் பால் ரு. 50 க்கு விற்கப்படுகிறது. வேலை இல்லை என கவலைபடாமல் பால் விற்றால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். என தெரிவித்தார்.

இதை ஆதரித்து அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆர் எஸ் சோதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,‘குஜராத்தில் இருந்து திரிபுரா கோடி கணக்கான ரூபாய் செலவில் பால் இறக்குமதி செய்கிறது. இது சிறந்த யோசனை. குஜராத்தில் 8000க்கு மேற்பட்ட பண்ணைகள் உள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.

Amul Managing Director supports Tripura CM who asked graduates to rear cows

அடுத்த செய்தி